இருமகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிக்க வந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:–
நடிகையாக இருந்த போது ரொம்ப கஷ்டப்பட்டேன். குட்டைப்பாவாடை அணியச் சொல்லி இயக்குனர்கள் பலர் நிர்ப்பந்தித்தனர். என் உடம்புக்கு அது சரிப்படாது என்று மறுத்தேன். இதனால் நிறைய படவாய்ப்புகளை இழந்தேன். டைரக்டர்கள் பாலச்சந்தர், மணிரத்னம் படங்களில் நடித்துள்ளேன். இவர்கள் இருவரும்தான் என்னை புரிந்து கொண்டு என் உடம்புக்கு ஏற்ற ஆடைகளை அணிய செய்தனர்.
திருமணத்துக்கு பின் நடிக்கவில்லை. என் கணவரை நண்பர் மூலம் படப்பிடிப்பு ஒன்றில் சந்தித்தேன். காதல் ஏற்பட்டது. திருமணம் செய்து கொண்டோம். இருமகள்கள் உள்ளனர். தமிழ் படத்தில் மீண்டும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். இது மகிழ்ச்சியளிக்கிறது. தெலுங்கு படங்களிலும் நடிப்பேன்.
இவ்வாறு மதுபாலா கூறினார்
No comments:
Post a Comment