Saturday, September 7, 2013

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ரஜினி, கமல் வாக்களித்தனர்

பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 
நீதிபதிகள் எஸ்.ஜெகதீசன், கே.வெங்கட்ராமன் தேர்தல் அதிகாரிகளாக இருந்து இந்த தேர்தலை நடத்தினர். வாக்கு சாவடியில் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டு இருந்தது, ஏராளமான பொலிசாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர்.
வாக்குப்பதிவு நடந்த இடத்தில் ஏராளமான தயாரிப்பாளர்கள் திரண்டு நின்று தங்கள் அணிக்கு ஆதரவு
திரட்டிய படி இருந்தனர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், ராதாரவி, மன்சூர் அலிகான், சசிகுமார், எஸ்.வி.சேகர், நடிகைகள் குஷ்பு, தேவயானி, நிரோஷா போன்றோரும் வாக்களித்தனர்.
தலைவர் பதவிக்கு போட்டியிடும் கே.ஆர்.கலைப்புலி தாணு, துணை தலைவர்கள் பதவிக்கு போட்டியிடும் டி.ஜி.தியாகராஜன், சுபாஷ் சந்திரபோஸ் பவித்ரன், கதிரேசன் பட்டியல் கே.சேகர் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் சிவசக்தி பாண்டியன் டி.சிவா, ஞானவேல் ராஜா சங்கிலி முருகன், தேனப்பன் ஆகியோரும் வாக்களித்தனர்.
எஸ்.ஏ.சந்திரசேகரன், புஷ்பா கந்தசாமி, கமீலாநாசர், ஆர்.கே.செல்வமணி, ஏ.எல்.அழகப்பன், தங்கர் பச்சான், மனோஜ் குமார், கோவை தம்பி, காஜா மைதீன், சித்ராலட்சுமணன், எச்.முரளி, ஜாகுவார் தங்கம், ஆர்.வி.உதயகுமார், நாஞ்சில் பி.சி.அன்பழகன், வி.சேகர், கருணாஸ், எடிட்டர் மோகன், ஜி.ஆர், கருநாகராஜன், அகத்தியன் உள்பட பலர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
தேர்தலில் மூன்று அணிகள் மோதுகின்றன, வாக்குபதிவு எந்திர கோளாறால் 10 நிமிடம் தடங்கல் ஏற்பட்டது.
மாலை 4 மணி வரை வாக்குபதிவு நடைபெறும், இன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.

No comments: